தீர்க்க சுமங்கலி பவ - 6
அன்று இரவு முழுவதும் யோசித்தேன், மறுநாள் காலை எழுந்தவுடன் ஆண்டி சொன்னது ஞாபகம் வந்தது ஒரு வேளை ஷேவ் பண்ணாமல் போனால் ஆண்டி மிகவும் கோபம் அடைவார். அதற்காக பயந்து என் உடல் முழுவதும் ஷேவ் செய்து கொண்டேன் , பின்பு மீனா ஆண்டி கொடுத்த அந்த மஞ்சளை உடம்பு முழுவதும் தேய்த்துக் கொண்டேன், இப்போது என் பாத்ரூமில் இருக்கும் கண்ணாடியில் என் முகத்தை பார்த்தேன் உடம்பு முழுவதும் ஷேவ் செய்து கொண்டிருந்த நான் இது என்ன முகத்தில் மட்டும் தாடி இருக்கிறது என யோசித்து முகத்தில் முழுவதும் ஷேவ் செய்தேன், பின்பு முகத்திற்கும் அந்த மஞ்சளை தேய்த்தேன்.
பின்பு குளித்து முடித்துவிட்டு ரூமிற்கு வந்து மீனா ஆண்டி கொடுத்த அந்த க்ரீமை உடல் முழுவதும் தடவ ஆரம்பித்தேன் அப்பொழுது ஷேவ் செய்த என் உடல் தோல் பெண்களின் தோல் போல மிகவும் மென்மையாகவும் வழவழப்பாகவும் இருந்தது, மேலும் அந்த கிரீமை தடவும் போது நான் ஒரு பெண் உடலை தடவும் எண்ணம் எனக்கு தோன்றியது. அவ்வளவு மென்மையாக இருந்து அப்போதுதான் முதன் முதலில் என் பெண்மையை உணர்ந்தேன்.
என்னை அறியாமல் சிறிது நேரம் என் பெண்மையை உணர்ந்து அதில் இருந்து வெளியே வந்து பின்பு உடைய மாற்றிக் கொண்டு முடியை சரி செய்து வீட்டு வேலையை தொடங்க ஆண்டி வீட்டுக்கு சென்றேன்.
அங்கு என்னை பார்த்த மீனா ஆண்டி ஆச்சரியத்தில்
மீனா : ஐயோ கண்ணா நீயா இது இவ்ளோ அழகா இருக்க , உன்ன உடம்பு தான கிளீன் ஷேவ் பண்ணி மஞ்சள் போட சொன்னேன், நீ என்னவென்றால் முகத்தில் மஞ்சள் போட்டு விட்டு பெண்களைப் போல வந்து நிற்கிற....சரிடா இதுவும் நல்லா அழகா தான் இருக்கு போய் வேலையை பாரு.
நான் : சரிங்க ஆன்ட்டி என்று சொல்லி என் வேலையை தொடங்கினேன்.
அன்று முழுவதும் என் உடலில் ஏதோ வித்தியாசமாக உணர்ந்தேன் அந்த மென்மையும் வழவழப்பாகவும் மிக உணர்ச்சியாக உணர்ந்தேன். அன்று நான் வித்தியாசமாக சட்டையும் வேட்டியையும் அணிந்திருந்ததை கவனித்த ஆண்டி
மீனா : இது என்னடா கண்ணா புதுசா வெட்டி எல்லாம் கட்டி இருக்க
நான் : ஆமா ஆன்டி இவ்வளவு நாள் ஷார்ட்ஸ் போட்டு இருந்தேன் எதுவும் தெரியவில்லை இப்பொழுது ஷேவ் செய்திருப்பதால் என் கால்களை மறைக்க வேட்டி கட்டி இருக்கிறேன் ஆண்டி
மீனா : அதனாலயாடா சரி இரு வரேன் என சொல்லி உள்ளே சென்ற ஆண்டி , வரும்போது அவர்கள் கையில் நான்கு நிறத்தில் அவர்கள் அணியும் உள்பாவாடை எடுத்து வந்தார் இந்தாடா கண்ணா நேத்து நைட்டு கபோர்டு கிளீன் பண்ணிட்டு இருந்தேன் அப்போதான் பார்த்தேன் இந்த உள்பாவாடை எல்லாம் நான் முன்னாடி குண்டா இருந்தப்ப வாங்கினது இப்போ எடை குறைந்துவிட்டேன் , அதனால இதெல்லாம் எனக்கு ரொம்ப பெருசா இருக்கு இதை யூஸ் பண்ண முடியவில்லை. அதனால இது உனக்கு கரெக்டா இருக்கும் என்று நினைக்கிறேன், இத நீ போட்டு பாரு டா என சொன்னாங்க ஆண்டி
நான் : இது பெண்கள் அணியும் உள்பாவாடை இதை எப்படி நான் போடுறது.
மீனா : இதுல என்னடா இருக்கு நீ வீட்டிலேயே தான் இருக்கிறாய், வீட்டில் இருக்கும்போது போட்டுக்கோ யாரு உன்ன பாக்க போற யார் கேட்கப்போற
நான் : இல்ல ஆன்ட்டி எனக்கு இதெல்லாம் வேண்டாம்
மீனா : எதுக்குடா வேணாம்னு சொல்ற இதுவும் வேட்டி மாதிரி தாண்டா ஒன் சைஸ் இருக்கறதுனால தான் உனக்கு கொடுக்கிறேன் இத பஸ்ட் நீ ட்ரை பண்ணி பாரு அப்புறம் இது புடிச்சி இருக்குன்னு நீயே தொடர்ந்து கட்டுவ.
நான் : எனக்கு வேண்டாம் இது பெண்களோடது நான் ஒரு ஆண் ,"நான் ஆண் என்று சொன்னதும் மீனா ஆண்டி சிரிச்சிட்டாங்க"....என்ன ஆண்டி சிரிக்கிறீங்க
மீனா : ஒன்னும் இல்லடா நீ ஆண் என்று சொல்வது சிரிப்பு வந்துருச்சு
நான் : என்ன ஆன்டி நான் ஆண் தானே இதுல என்ன சிரிக்கிறதுக்கு இருக்கு
மீனா : இல்லடா உன் மஞ்சள் பூசிய முகமும் வழவழப்பான உன் உடம்பும் பெண்களைப் போல முடியும் பார்த்து உன்ன யாரும் ஆண்னு சொல்ல மாட்டாங்க , அதனால தான் சிரிச்சேன்.
எனக்கு அப்போது பயங்கரமாக கோவம் வந்தது அதை உணர்ந்த ஆன்டி என்னடா கண்ணா கோபப்படாதே, நான் தானே சொன்னேன் டா சும்மா விளையாண்டேன்டா சரி விடு இந்தா இந்த உள்பாவாடையை வாங்கிக்கோ நாளையிலிருந்து இதை கட்டிட்டு வா சரியா நானும் அதை வாங்கிக் கொண்டேன், வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து என் வீட்டுக்கு வந்தேன்....
Comments
Post a Comment